Publisher's Synopsis
சைவத்திறவு - திரு. வி. கலியாணசுந்தரனார் Saivathiravu by Thiru. V. Kalyanasundaram was first published in 1929. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - பகவன் முதற்றே உலகு" என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழுமுதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்கவேண்டுவது தலையாயார் கடன். கடவுளுண்மையில் உறுதி யுடையார் பலர். அவ்வுண்மை யுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழிகோலினார் மிகச் சிலர். ௮ம் மிகச்சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக் காரணம் பற்றியே இந்நூற்குச் "சைவத் திறவு" என்னும் பெயர் சூட்டப்பட்டது.